ஹாய்! ஹலோ! வணக்கம்!!
உங்களையெல்லாம் சந்தித்து வெகு நாள்கள் ஆகிறது. என் புதிய நந்தவனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி!!! நதியோரம் பூக்களை காணோமே என்று என் குரு கேட்டு விட்டார். சிஷ்யை இதோ கிளம்பிவிட்டேன்!! இனி வார வாரம் ஆரவாரமின்றி என் புதிய நந்தவனத்தில் பல வண்ண பூக்கள் பூக்க இருந்கின்றன என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! - தமிழ் ராஜா
தமிழ் தொட்டிலில் தவழும் குழந்தை திரு தமிழ் ராஜா-விற்கு இன்று பிறந்த நாள். இந்நாளில் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து கொள்கிறேன்..அவர் வாழ்வில் மேலும் மேலும் பல வெற்றிகளை தனதாக்கி கொள்ள இறைவனை வேண்டுகிறேன்!!!
படித்ததில் பிடித்தது!!
இந்த தலைப்பில் நான் படித்த புத்தகங்களைப் பற்றி எழுதவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு ஆசை.. இதோ இனி வாரம் வாரம் எழுத தொடங்கலாம் என நினைக்கிறேன்.
அனுராதா ரமணன் - அறிவுரைகள்!!
அன்புடன் அந்தரங்கம் என்ற தலைப்பில் அனு அம்மா பல வருடங்கள் தொடர்ச்சியாக, தினமலர் நாளிதழின் ஞாயிறு இணைப்பு புத்தகமான வாரமலரில் எழுதி இருக்கிறார். அவர் எழுதியவரை நான் இடைவிடாத வாசகி அந்த பகுதிக்கு! அவருக்கு பின் அந்த பகுதி எனக்கு ரசிக்கவில்லை.
அன்புடன் அந்தரங்கம் என்ற தலைப்பில் அனு அம்மா பல வருடங்கள் தொடர்ச்சியாக, தினமலர் நாளிதழின் ஞாயிறு இணைப்பு புத்தகமான வாரமலரில் எழுதி இருக்கிறார். அவர் எழுதியவரை நான் இடைவிடாத வாசகி அந்த பகுதிக்கு! அவருக்கு பின் அந்த பகுதி எனக்கு ரசிக்கவில்லை.
வாசகர்கள் தங்களின் அந்தரங்க குடும்ப பிரச்சினைகளுக்கு அனு அம்மாவிடம் தீர்வு கேட்டு கடிதம் எழுதுவார்கள். அதற்கு அவர் அளிக்கும் பதில்கள், அறிவுரைகள் எல்லாம் என்னை வியப்பில் ஆழ்த்தும். அவற்றையே இங்கு பதிவாக ஒவ்வொரு சனிக்கிழமையும் எழுத விழைகிறேன். நம்மில் கேட்க தயங்கும் பல கேள்விகளை பிறர் கேட்டு அதன் மூலம் ஒரு தீர்வை நாமும் பெறும்போது ஒரு மன நிம்மதி பிறக்கும். ஆகையால் அந்த நிம்மதி ஒருவர்கேனும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் எழுத தொடங்குகிறேன் உங்களின் மேலான ஆதாரவுடன்!!!
பால கணேஷ் சார் சொன்ன மாதிரி இனி நன்றி மறக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனால இப்போ எல்லாருக்கும் என் நன்றிகள்! பொறுமையா என் வலைத்தளம் வந்து பதிவினை படித்ததற்கு!!!
அன்புடன்
சமீரா